Thursday, November 24, 2011


தங்க தமிழ் தலைவா வாழிய பல்லாண்டு,
உன் வழிகாட்டுதல் ஏன் மகனுக்கும் வேண்டும்தலைவா,
இன்னும் எம்மீது என்ன கோபம், போதும் உன் மறைவு
வாழ்விழந்தோர் வளம் பெற
உன் வார்த்தை ஒன்றாவது காற்றின் வழி வரட்டும்

Friday, June 3, 2011

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பட்டொளி வீசி பறக்கட்டும்

கல்லறைகள் திறந்து கொண்டன

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்

ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

Tuesday, February 22, 2011

புரசந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு


புரசந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

அம்மா!
ஈழத் தாயே
வேங்கையை பெற்றெடுத்த பெருந் தாயே!
காலமெலாம் கயமைகளால்
ஞாலமிழந்த எம் ஞாயங்களை
மீளெடுத்து எம்
கோலமெழுதிய கொற்றவனை
தந்தவளே!
ஈன்ற பொழுதை விட பெருமை பெற்றவளே!
உன் மைந்தன் உமக்காற்றிய
ஆழ்ந்த வியத்தகு வீரியங்கள்
புடை சூழ இயற்கையெய்தினாய்.

ஈழத் தாயே
போய் வருக,
நோயின் உபாதைகளின்
உத்திரத்திலிருந்து உறவறுத்து
செத்திலாள் இந்த சேந்தனை பெற்றவள் என்ற
பெரு நிறைவுடன் போய் வருக எம்
பெருந்தகையே.

உங்கள் ஆத்மங்கள் ஓய்வெழுதட்டும்..
ஆன்மா அழகியலாய் அமைதி பெறட்டும்.
திங்களாய் எம் வாசல் வந்தாய்-அம்மா
சிங்களனால் எம் இனம் பெற்ற இன்னல் தீர்க்கும்.
பொன் ஈழ வேந்தனை ஈன்றெடுக்க நீ வருவாய்.
நிச்சயம் நீ வருவாய்.
போய் வா எம் பொற்பாதமே.
பதமே

Saturday, December 4, 2010




சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்

சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

உமை எருமை என்றார்கள்,
உன்னை கொட்டி என்றார்கள்
வெட்டி பயல்கள் என்றார்கள் .
முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றார்கள்


பார்த்தார்களே உன் தாயக அடங்காப் பற்றை
ஓடவே வழியில்லாமல் பிச்சை எடுத்து உயிரை காத்து கொண்டார்கள் .

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்
உம் வீரம் கண்டு உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம்,பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

(என்ன செய்ய உங்களுக்கு வாய்த்த தலைவன் போல் எமக்கில்லையே எம்மை காட்டி மற்றும் கூட்டி கொடுக்கவும் மற்றுமே தகுதியானவர்கள் தலைவர்களாக உள்ளனர் )

Thursday, December 2, 2010

விலங்கு மகனே உன்னை உள்ளேவும் வைப்போம்


சரணடைந்த மக்களை கொல்வாரம்
போராளிகளை கொல்வாரம்
பெண்களின் கற்ப்பை சுரையாடுவார்களாம்
குழந்தைகளின் மேல் பாஸ்பரஸ் குண்டு வீசுவார்களாம்
பரதேசி நாய்களாட நாங்கள்
பெரும்புலிகள், வரிப்புலிகள் (மக்களே புலிகள், புலிகளே மக்கள்)
நாங்கள் மீளவும் நாள் வரும், நாயே
நீ நாறவும் உன் கருவறுக்கவும் தேதி வரும்
அன்று உன் கடன் முடிப்போம் அது வரை இன்று போல்
நாயே உன்னை அங்கேய உட்க்கார வைப்போம்
உளியடிப்போம் விலங்கு மகனே உன்னை உள்ளேவும் வைப்போம்

Wednesday, December 1, 2010

அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்(வீடியோவை பர்ர்க்க இங்கே சுண்டவும்)

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001

என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு

வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்
ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

Friday, November 26, 2010

அன்பு தலைவா வாழிய பல்லாண்டு


மாவீர தலைவா, மானமிகு மறவா!
மாநில மங்கை நல்லாள் மட்டுமல்ல
இம் மாநிலத்துள்லோரும் உன் மீது குலவிய
காற்று வர காத்திருக்கிறோம்
தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான் என
பறை சாற்ற எங்கள் கைகள் துடிக்கின்றன

தலைவா தமிழ் உள்ள வரை, நல்ல தமிழன் என்பவன் உள்ளவரை என்றும் அழியாது உன் புகழ்,

வாழ்க எம் தந்தையே
வாழ்க எம் தமிழின தலைவனே
நீடூழி வாழ்க